Posts

Showing posts from June, 2009

கோவையின் கலாச்சாரம் சாரமிழந்து வருகிறதா...?

ஒவ்வொரு நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கலாச்சாரப் பின்னணி உண்டு. எங்கள் நாட்டிற்கும் அத்தகைய சான்றுகள் ஏராளம். இதில் நான் பெரியவன், நீ பெரியவன் என்ற வாக்குவாதம் வேண்டாம். எங்கள் கலாச்சரப்பின்னணியை பின்பற்றி நாகரீகம் அடைந்தவர்கள் ஏராளம். ஆனால் அவர்கள் தான் நாகரீகத்தை கண்டுபிடித்தவர்கள் போல் உலா வருகிறார்கள். அந்த சீரழிவான நிலை கோவை மாநகரிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

கேரளாவின் தலைநகரா கோவை?

நாயர் ஒரு டீ போடுங்க !! இது தமிழகத்தின் எந்த ஊரில் இல்லா விட்டாலும் கோவையில் சகஜமாக நம் காதில் விழும் ஒரு சொற்றொடர். ஏனெனில் கோவையில் பெரும்பாலான தேநீர் விடுதிகள் மலையாளிகளால் நடத்தப்படுகின்றன. இவை மட்டுமன்றி அனேக வணிக நிறுவனங்கள், சில்லரை விற்பனை அங்காடிகள், தொழிற்சாலைகள் மற்றும் சுய தொழில் நிறுவனங்களிலும் அவர்களின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. "வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" என்ற நமது அசட்டுத்தனமான ஒரு வீர வசனத்தின் வாயிலாகவே இது சாத்தியமானது என்பது மறுதலிக்க முடியாத ஒரு நிஜம். இந்த பதிவின் தலைப்பில் சொன்னது போல் கேரளாவின் தலைநகரில் கூட இவ்வளவு சுதந்திரமாக இவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்...ஆனால் கோவையில்...?

இறையாண்மை...அப்படீன்னா?

இந்திய இறையாண்மையை நினைத்தால் புல்லரிக்குது! ஆஸ்திரேலியாவுல இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டால் உங்களுக்கு கோபம் வருது... ஆஸ்த்ரியாவுல சீக்கிய மதகுருவை கொன்று விட்டால் உங்களுக்கு பொத்துக்கிட்டு வருது... சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏதாவது பிரச்னை என்றால் வரிந்து கட்டிக்கொண்டு பஞ்சாயத்துக்கு போக துடிக்கிறது...அது போக சீக்கியர்களின் மயிரை மறைக்கும் டர்பன் கட்டற உரிமைக்கு ஏதாவது பிரச்னை வந்தா அதுக்கெல்லாம் கொதிக்கிற உங்க ரத்தம் ஏன் தமிழன் "உயிர்" போகும் போது மட்டும் பாழாய்ப்போன இறையாண்மை பத்தி யோசிக்குது... மத்திய அரசே!! நாங்க இந்தியாவுல தான் இருக்கிறோமா...இல்ல தனி நாடா? தனி நாடு கேட்டாலும் தர மாட்டேன்னு சொல்றீங்க? பிரிவினை அப்படின்னு வியாக்கியானம் பேசுறீங்க? சபாஷ் ! உங்க ராஜதந்திரம் ரொம்ப நாளைக்கு தமிழன் மூளையை சலவை செய்து விட்டது... ஆனால் இனி வரும் காலங்களில் தமிழின மக்களின் கோபக்கனல் தெறிக்கும் விழிகளை நீங்கள் எதிர்கொள்ள தயாராகுங்கள்! தமிழா!! அரசு வண்ணத் தொலைக்காட்சி வாங்கிட்டியா..? ஒரு ரூபா அரிசி வாங்கிட்டியா? உனக்கு இதை விட வேற என்னடா வேணும்? நம்ம இப்படியே இருந்...