Posts

திமுகவும் ஈழப்போரும்

ஈழப்போரும் திமுகவும்*** எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் ஈழப்போரும் திமுகவும்*** எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் டெல்லியில் சொந்த மகளை வெறும் விசாரணை கைதியாக அநியாயமாக சாட்சியங்களை கலைத்து விடுவார் எனச் சொல்லி சொல்லியே ஜெயிலில் 6 மாதங்களாக வைத்திருந்தார்களே ஒரு முதல்வராக இருந்த கலைஞரால்  தடுக்க முடியலையே ஏன்? சொந்த நாட்டில் சொந்த மகளுக்கு ஏற்பட்ட அநீதியையே தடுக்கமுடியாத கலைஞரால் ஈழத்தில் நடந்த போரை எப்படி நிறுத்தியிருக்க முடியும்? (1)கேள்வி :- கலைஞரால் சோனியாவிடம் பிரபாகரனை காப்பற்றுமாறு கோரமுடியுமா? ராஜீவ் கொலையில திமுகவின் மீதும் களங்கம் சுமத்தப்பட்டது அதையும் மீறிதான் சோனியா திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டார் ராஜீவை கொன்றது LTTE தான் என்பது உறுதியில்லை எனினும் தன் கணவன் இறப்பிற்கு பிரபாகரன்தான் காரணம் என நம்பும் சோனியாவிடமே போய் பிரபாகரனை காப்பாற்று என கலைஞர் கேட்கமுடியுமா? (2) கேள்வி:- கலைஞர் சொன்னா இந்திய அரசு கேட்டு போரை நிறுத்தி இருக்குமா? பதில் :- 2008 வாக்கிலேயே திமுக மேல் காங்கிரஸ் தலைவர்களுக்கு கசப்புணர்வு மேலோங்கிவிட்டது.  2009 ல் கா...

மெரினா புரட்சி

Image
மெரினா புரட்சி! சல்லிக்கட்டுக்கான மாணவர்கள் , இளைஞர்களின் போராட்டம் நிறைவுபெற்று விட்டதா , மேலும் தொடருமா என்று உறுதியாகத் தெரியாத சூழலில் இதனைப் பதிவிடுகின்றேன். கிடைத்திருப்பது முழு வெற்றியில்லை ,  முதல் வெற்றிதான் என்று போராட்டக் களத்திலிருந்து மாணவர்கள் சிலர் கூறுவதைக் கேட்க முடிந்தது. உண்மைதான். ஆனாலும் கிடைத்துள்ள முதல் வெற்றி அவ்வளவு எளிதானதன்று. மக்களின் கோரிக்கையை மதித்தும் ,  ஏற்றும் இவ்வளவு குறுகிய நாளில் ஓர் அவசரச் சட்டம் ,  இதற்கு முன் இயற்றப்பட்டுள்ளதாகத்   தெரியவில்லை .   பெற்றுள்ள வெற்றியைக் கொண்டாடுவதும் , அடுத்த முழு வெற்றியை நோக்கி நகர்வதுமே இன்றைய சூழலில் சரியானதாக இருக்க     முடியும். இல்லையில்லை ,  இறுதி வெற்றி பெரும் வரையில் போராட்டம் தொடரும் என்பது நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டது. இறுதி வெற்றி அல்லது நிரந்தரத் தீர்வு என்று அவர்கள் குறிப்பிடுவது சட்டத் திருத்தமாகவே இருக்க முடியும்.   1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச்   சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதே இளைஞர்கள் வேண்டும் இற...

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை

Image
பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்! இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்! பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்! இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்! சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை சென்னை, ஜன. 6- பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாது என்று மகாபாரதம் காட்டும் தருமம் பற்றி கேள்வி எழுப்பினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். 12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள் 9 ஆவது இயலினுடைய 32 ஆவது பாடல் சொல்லு கிறது; கிருஷ்ணன் சொல்கிறார்: யாருக்கெல்லாம் நான் என்னிடத்தில் அடைக்கலம் கொடுத்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துக் கொண்டு போவேன் என்றால், பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள் (சூ...

கீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை அது பார்ப்பனர்களுக்கான நூல்

Image
கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா? கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா? சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி சென்னை, ஜன. 5- கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். 12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்களே, எழுச்சித் தமிழர் நண்பர் தொல்.திருமாவளவன் அவர்களே, பேராசிரியர், நண்பர் அருணன் அவர்களே, கவிஞர் கலிபூங்குன்றன் அவர் களே, அரங்கில் அமர்ந்திருக்கின்ற பல்துறை சான்றோர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணனின் விளையாட்டுகளையும், ...

திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும்

Image
திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும் திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும் வருணபேதம் பேசும் கீதை புனித நூல் அல்ல! குன்னூரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி Ad by Supreme AdBlocker  |  Close குன்னூர், டிச.9 - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமே தவிர, பிறப்பில் பேதம் பேசும் கீதையை அறிவிப்பது ஆபத்தானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.  இன்று  (9.12.2014) குன்னூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கேள்வி:  பாஜக விலிருந்து வைகோ வெளியே வந்தது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்:  இது காலம் தாழ்ந்த முடிவாக இருந்த போதிலும்கூட, வரவேற்கவேண்டிய சிறந்த முடிவு. வைகோ எங்கள் சகோதரர். திராவிட உணர்வு, திராவிடத் தால் எழுந்தோம் என்பதில் எப்போதும், அந்த கொள்கையி லிருந்து மாறாதவர். அரசியல் நிலைப்பாட்டில்பல நேரங்களிலே அவர்களுடைய நிலைநாங்கள் ஏற்கத் தக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அடிப்படை உறவை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே, அதை வரவேற் கிறோம். ...