வால்மீகி இராமாயணம்
(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும் மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.) பால காண்டம் பதினான்காம் அத்தியாயம் தொடர்ச்சி ஆரியப் பார்ப்பனர் மயக்கத்தில் எவ்வாறோ அகப்பட்டு மயங்குபவரோ? அன்றி அவ்வகுப்பினரில் ஒருவரோ இச்சாமிநாதன்? மேலே நாம் கூறியுள்ள மொழி பெயர்ப்பாளர் நால்வரில் அநந்தாச்சாரியாரும் சீனிவாசய்யங்காரும் வைணவ சமயத்தினர். மற்றிரு வரும் ஆரியரே. இவர்கள் எல்லோரும் அகலிகை சோரம் போனமையையும் தசரதன் தன் பத்தினி...