வால்மீகி இராமாயணம்





(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)



பால காண்டம்

பதினான்காம் அத்தியாயம் தொடர்ச்சி ஆரியப் பார்ப்பனர் மயக்கத்தில் எவ்வாறோ அகப்பட்டு மயங்குபவரோ?  அன்றி அவ்வகுப்பினரில் ஒருவரோ இச்சாமிநாதன்?  மேலே நாம் கூறியுள்ள மொழி பெயர்ப்பாளர் நால்வரில் அநந்தாச்சாரியாரும் சீனிவாசய்யங்காரும் வைணவ சமயத்தினர்.  மற்றிரு வரும் ஆரியரே.  இவர்கள் எல்லோரும் அகலிகை சோரம் போனமையையும் தசரதன் தன் பத்தினிமார் களை இரித்விக்குகளிடம் ஒப்படைத்ததையும் ஒப்புக் கொண்டு உண்மையை உள்ளவாறெழுதியிருக்க அவற்றைத் தாமும் படியாமல் படித்த நமது கூற்றையும் கேளாமல் இவர் பிதற்றுரை பல வரைகின்றனரே?  கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்த அரைகுறைப் படிப்பாளியாகிய நம் சாமிநாதனே ஆரியப் புரளியில் இவ்வாறு ஏமாறி மயங்கிக் கிடந்தனரென்றால், கொஞ்சமும் படியாமலிருக்கும் சாதாரண மக்களின் நிலையைக் கூறவும் வேண்டுமா?  தாடகாபிராட்டி யாருடைய பெருமைகளை இவர் தேவாரத்தைப் படித்து உணர்வாராக !


இனி அவர் தமக்கே பொருள்படாதெழுதும் வெற்று ரைகளை விடுத்து, அவர் பின்னெழுதும் இராமா யணத்தில் அநேக ஜனங்கள் வெகுவாய்த் தெரிந்து கொண்டிராத - ராமனுடைய குற்றமெனக் கருதிக் கொண்ட ஒரு பார்ப்பனக் குழந்தையின் மரணத்துக்காக ஒரு சூத்திரனைச் சிரச்சேதம் செய்த கதையை எடுத்துக்காட்ட வந்த நாயக்கருக்கு, எல்லாராலும் ஸ்பஷ்டமாய்த் தெரிந்திருக்கும்படியான விஷயமாகிய குகனென்னும் படகோட்டி விஷயத்தில் ஜாதி வித்தியாச மின்றி அவனை அன்போடாதரித்து அவனையும் சகோதரர்களில் ஒருவனாகச் சேர்த்துக் கொண்ட உண்மை நெறியும், வானரர்களை வித்தியாசமின்றி அன்பினால் பிணித்துக் கொண்டு அவர்களுடன் ஒன்றாயிருந்து காலங் கடத்திய நீதிமுறையையும், மானிட வகுப்பைச் சேராத சடாயு என்னும் பக்ஷியின் மேல் வைத்த அன்பினால் தான் மரணத்துக்காகக் கண்ணீர் விட்டுக் கதறியழுது, அதைப் புள்ளினமெனக் கருதாது அதற்கும் மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களைத் தாமே செய்த நேர்மையும், சபரி என்னும் ஓர் ஏழைப் பெண்ணாலளித்த உணவுவினை உண்ட அன்பின் பெருக்கும், அரக்கர் குலத்தைச் சேர்ந்த விபீஷணரின் நேர்மையான நடத்தையைக் கருதி, அவரை அரக்கனெனத் தள்ளாமல் தன்னுடன் சேர்த்துக் கொண்ட சமத்துவ நீதியும், நிராயுதபாணியாய்த் தன்னுடைய பாணத்தில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு கதியற்றவனாக நின்ற இராவணனை, இன்று போய் நாளை வா என்று சொன்ன அரச நீதியும், வண் ணான்தானே என்று அலட்சியம் செய்யாமல் அவனை ஒரு பிரஜா உரிமை உடையவனெனக் கருதி, அவன் சொல்லுக்கும் தான் கட்டுப்பட வேண்டும் என்னும் காரணத்தால், தன்னுடைய மனைவியாகிய நாட்டினர சியைக் காட்டிற்கனுப்பிய நன்னடத்தைகளும் இராமன் பால் இருக்க, சமத்துவ வேஷம் பூண்ட நாயக்கருக்கு இவையெல்லாம் விளங்காமல் அந்த ஒரு விஷயம் மட்டும் அடிக்கடி பல சமயங்களிலும் நிதர்சனமாய்க் கொண்டு வருகின்ற நேர்மைதானென்னே! என்ற கூற்றினை ஆராய்வோம்.  மேலே கண்ட கூற்றுகளைப் படித்துப் பார்த்தால், அது ஒரு பார்ப்பனன் தமிழாகவே காணப்படுகிறது.  ஆதலின் சாமிநாதன் என்பவர் ஒரு பார்ப்பனராதல் வேண்டும்.  அன்றி பார்ப்பனன் பெற்ற பிள்ளையை (கட்டுரையை)த் தாம் பெற்ற பிள்ளையாகக் கொண்ட ஒரு பார்ப்பனரல்லாதாராக வேண்டும்.  இவர் பார்ப்பனரல்லாதாரெனின், இவர் பிறருக்குப் பிறந்த பிள்ளைகளைத் தன்னவையெனக் கொண்ட தசரதன் செயலுக்குப் பரிந்து பேசுதற்கு ஒப்பமிட்டது வியப் பாகாது.  அன்றி பார்ப்பனரேயெனின், இவ்வாறெழு துவது அவரியல்பே.  இத்தகைய கட்டுரையை வெளிப் படுத்தியவரின் பெருமைதானென்னே!  இதனால் தமிழ்நாடு ஆசிரியர் பெருமையும், கல்வியும், ஆராய்ச்சி வன்மையும் இனிது புலனாகும்.  குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்புகளும் உள.  இனி மேலே குறித்துள்ள கூற்றுகளை ஆராய்வோம்.


இராமன் ஒரு பார்ப்பனனுக்காக ஒரு சூத்திரனுடைய தலையை வெட்டிய அநியாயத்துக்குச் சமாதானம் கூறுவதை விடுத்து, நம் சாமிநாதன் வேறு பல விரித்தார்.  விரித்தமையும் மிக அழகிதே.  இராமனைப் பற்றிய வேறு சில செய்திகளைக் குறித்தார்.  அவற்றை வரும்போது விவரமாக ஆராய்வோமேனும் ஈண்டுச் சுருங்கக் கூறுவோம்.  குகனுடைய உதவியில்லாமல் போனால், இராமன் கங்கையைக் கடத்தலரிது.  ஆதலின், அவனு டைய உதவி பெறுதற்காக இராமன் அவனை அவ்வாறு பேசி மயக்குகிறான்.  இராமன் ஒரு ராஜதந்திர நிபுணனே.  குரங்குகளோடு அவன் கூடி வாழ்ந்தது அவன் பெற்ற சாபப் பயனேனும், அவன் வாலியை மறைந்து நின்று கொன்று சகோதரத்துரோகியாகிய சுக்ரீவனோடு நட்பு கொண்டது.  பரதனாகிய தனது சகோதரனுக்குத் துரோகம் நினைத்த அவ்விராமனுக்கு இயல்பானதே.  இது போலவே சகோதரத் துரோகியாகிய விபீஷணனிடம் இராமன் நட்புக் கொண்டதும் அவனுக்கு இயல்பும் இராஜ தந்திரமுமாம்.  இவ்வாறாக இவ்விருவருடனும் நட்பு கொண்டதை இராமனுக்குப் பெருமையானதென மயங்கினார் சாமிநாதன்.


பேராசைக்காரனும் சகோதரத் துரோகியுமாகிய விபீஷணனைத் தன்பக்கம் சேர்க்காதிருந்தால், இராமன் இராவணனைக் கொன்றிருத்தல் இயலாது.  இராவண னுடைய நெஞ்சில் அம்பெய்து கொல் எனக் கூறி அருகே நின்றானே பாவி விபீஷணன்!  அநியாயம்!  அநியாயம்!  இன்று போய் நாளை வாவென இராமன் கூறியதாகக் கூறுவது, இராமனால் பற்றுடைய வால் மீகியும் கம்பரும் என்பதைச் சாமிநாதன் உணர்வாராக !  இனத்துரோகமும் இனத் துரோகச் சேர்க்கையும்தான் சாமிநாதனுக்குச் சமத்துவமாகத் தோன்றுகின்றன போலும்.  தனக்கு உதவி செய்த சடாயுவுக்கு  மனமிரங்  கியது உலக இயற்கையே.  நல்லுணவு கிடையாது திண்டாடிய இராமனுக்குச் சபரி நல்லுணவு தர அதை அவன் ஆவலுடன் வாங்கி உண்டதும் அவனுக்கு ஒரு பெருமையே!  நன்றாகச் சாப்பிட்டதை ஒரு பெருமை யாகக் காட்டியது சுவாமிநாதனுக்கு ஒரு பெருமையே.  இவற்றால் இராமனுடைய துரோகச் செயல்கள் இனிது புலனாகும்.  இராமன் சூத்திரனைக் கொன்றது அதிபாத கமே.  அதனால், இராமன் சிறந்த அதர்மராஜனே என்பதும் விளங்குகிறது.  இனி சீதையைப் பற்றி அவர் கூறுவதைக் கவனிப்போம்.


இராமன் சீதையின் கற்புடைமையில் அய்யுறுகிறான்.  சீதையை இராவணன் பற்றி மடியில் வைத்துப் போனதும் அவனுடைய வசமாக அவள் பத்துமாதம் வாழ்ந்ததுமே அவ்வையுறவுக்குக் காரணம்.  சீதையும் தன்னுடல் இராவணன் வசமிருந்ததை ஒப்புக் கொள்ளுகிறாள்.


இராமன் அரசாளும் நாளையிலே ஒரு வண்ணான் அந்நியனோடு வாழ்ந்த சீதையை இராமன் சேர்த்துக் கொண்ட இழிசெயலை மிக இழித்துப் பேசுகிறான்.  அதனால் மானம் பொறுக்க மாட்டாமல் இராமன், நிறைந்த கர்ப்பிணியாக இருந்த சீதையைக் காட்டுக்கு வஞ்சகமாக அனுப்புகிறான்.  இவ்விழிந்த செயலைப் பாராட்டிச் சாமிநாதன், வண்ணான்தானே என்று அலட் சியம் செய்யாமல் அவனும் ஒரு பிரஜா உரிமையுடை யவனெனக் கருதி, அவன் சொல்லுக்கும் தான் கட்டுப்பட வேண்டுமென்னும் காரணத்தால், தன்னுடைய மனைவியாகிய நாட்டின் அரசியைக் காட்டிற்கனுப்பிய நன்னடத்தைகளும் என்று எழுதினார்.  பிரஜா உரிமைபற்றியும் அரசாளும் முறைபற்றியும், நன்னடத்தை பற்றியும் இச்சாமிநாதனுக்குள் அறிவு மிக அழகியதே.  இவ்விழிந்த ஆராய்ச்சியையும் தமிழ்நாடு வெளிப் படுத்தியதே!  அறிவாளர் நகையாடக் கூடிய இத்தகைய கட்டுரைகளை வெளிப்படுத்துவதிலும் நல்ல கட்டுரைகள் கிடையாது போலும்.  வெள்ளைத் தாள்களை மடித்துச் சந்தாதாரர்களுக்கு அனுப்பின் மிக நலமாக இருக்குமே. வண்ணான் ஒருவன் தன் மனைவியின் நடத்தையில் அய்யுற்றது காரணமாகத் தன் மனைவியை - அதிலும் பூரணக் கர்ப்பிணியை ஒருவன் காட்டுக்கு அனுப்பினா னென்றால், அவனைப் போலும் அறிவில்லாத முழு மூடன் ஒருவன் இவ்வுலகத்தில் இதுகாறும் தோன்றி யிருப்பானா என்பதைச் சாமிநாதன் சிந்திப்பாராக!  இராமன் இதனால் மிகவும் முழுமூடனாதல் வேண்டும்.  அன்றியும் இரக்கமற்ற பாவியுமாதல் வேண்டும்.  தன்னுடைய மனைவியும் பூரணக் கர்ப்பிணியுமாகிய சீதையென்ற ஒரு பெண்ணிடத்திலே இவ்வாறு மிருகத் திலும் கேடு கெட்ட மிருகம்போல நடந்துகொண்ட இராமன், தவம் செய்து கொண்டிருந்த ஒரு சூத்திர னுடைய தலையை வெட்டினானென்பது ஒரு ஆச்சரிய மன்று.  விவேகானந்தர் கூறுகிறாரென நம்பும் இடைச் செருகலெனும் நம்பிக்கையைச் சாமிநாதன் விட்டொழிப் பாராக!  மேலும், சீதை கற்பிழந்தவளாகாதிருந்தால், அவள் கணவனாகிய இராமன் அய்யுற்றதோடு நில் லாமல் உறுதி கொண்டு அவளைக் காட்டுக்கு அனுப்பி யிரானன்றோ?  அவரது பாரதக் கூற்றாராய்ச்சியை வரும்போது எழுதுவோம்.இது இடனன்றாம். 


அய்யோத்தியா காண்டம்

முதல் அத்தியாயம் பரதன் சத்துருக்கனோடு மாமன் வீட்டில் வாழ்ந்து வந்தான். தசரதனுக்குத் தன் மக்கள் நால்வரிடத்திலும் சம அன்பு என்றாலும், இராமனிடத்தில் அதிக அன்பு. இராமனோ பிறரால் அறியமுடியாத எண்ணத்தை யுடையவன், ஆலோசித்த காரியம் முடியும் வரையில் பிறர்க்குத் தெரியாமல் மறைத்து வைத்துக்கொள்வான். இராமன் எல்லா ஜனங்களுக்கும், தசரதனுக்கும் மகழ்ச்சியைக் கொடுக்கும் நல்ல நடைகளோடு விளங்கினான். அதனால் ஜனங்கள் இவன் தங்களுக்கு அரசனாக வேண்டுமென்று ஆசை கொண்டார்கள். தசரதனும் நமது குழந்தை இராமனுக்குப் பட்டா பிஷேகம் செய்து இந்த முதிர்ந்த வயதில் அதனா லுண்டாகும் ஆனந்தத்தை அனுபவித்துத் தன் மந்திரிகளோடு யோசித்து இராமனுக்குப் பட்டங்கட்டத் தீர்மானித்தான். அதுவும் சீக்கிரம் நடைபெற வேண்டுனெ எண்ணினான். தூதர்களையனுப்பி அரசர்களை வரவ ழைத்தான்.  ஆனால் கேகய மன்னனும் சனகனும் வெகு தூரத்திலிருந்ததால், பிறகு கேட்டு மகிழட்டுமென்று அவர்களுக்குச் செய்தியனுப்பவில்லை. அவ்விரு வரையும் தவிர எல்லா அரசர்களும் வந்து சேர்ந்தனர். அவ்வரசர்களையும் தன் குடிகளையும் பார்த்துத் தசரதன் பின்வருமாறு கூறினான்.


எனக்கு வயது முதிர்ந்து விட்டது. அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து தளர்ந்துபோன இவ்வுடலுக்கு ஓய்வு வேண்டுகிறேன். அதனால் இப்போது இங்கிருக்கும் எல்லோருக்கும் சம்மதமானால் இளவரசாக இருக்கத் தகுந்தவனென்று நான் குறிப்பிடும் மூத்த மகனான இராமனை அரசனாகச் செய்து சுகமாக இருக்க நினைக்கிறேன். இராமன் உத்தம குணங்களையுடையவன், இவ்வெண்ணம் நலமெனத் தோன்றினால், நீங்கள் அனுமதி கொடுக்கலாம். இது உசிதமன்றென்றால், வேறு என்ன செய்யலா மென்று அதையும் சொல்லுங்கள். இராமனுக்குப் பட்டம் கட்டுவதே உசிதமென்று எனக்குத் தோன்றினாலும், மத்தியஸ்தர்களான உங்களோடு ஆலோசித்துச் செய்வதே உசிதமென்று நினைக்கிறேன் என்று சொன்னான். அதைக்கேட்ட எல்லோரும் அவனு டைய எண்ணப்படி செய்வதே நலமென்று கூறினர்.

Comments

Popular posts from this blog

மன்மத குருக்கள்

தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும்

திமுகவும் ஈழப்போரும்